த்ரிவிக்கிரமன்

Sunday, August 21, 2005

இதுவரை ஆதரவு அளித்தவர்களுக்கு நன்றி.... விடைபெறுகிறேன்..

Friday, February 25, 2005

சாதி அமைப்புகள் - சிறு விளக்கம்

சாதி அமைப்பினை கண்ணன் "ஸாதுர் வர்ண்யம் மயாசிருஷ்டம்" என்று கூறி தான் படைத்ததாகவும், அவை எவ்வாறு பிரிக்கப்பட்டன என்பதை 18-ம் அத்தியாயமாம் மோஷ சன்னியாச யோகம் என்னும் அத்தியாயத்தில் பிராம்மனன் எத்தகைய தொழில் செய்வான் சத்ரியன் என்ன தொழில் செய்வான் வைசியன் என்ன தொழில் செய்வான் சூத்திரன் என்னனென்ன தொழில் செய்யவேண்டும், என்பதை விவரித்து இந்த
நான்வகை வருணங்களும் அவரவர் செய்யும் தொழில்களினால்தான் பிரிக்கவேண்டும் பிறப்பால் அன்று என்று தெளிவுபற கூறியுள்ளான். இதை ஏற்கனவே ஒருஅளவுக்கு அலசியாயிற்று. சரி கீதையில் கண்ணன் கூறிய வர்ணமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஏதாவது மாற்று கருத்துக்கள் அந்த காலத்தில் இருந்ததா என்றால் நானறிந்த வரையில் இல்லை என்றே கூறுவேன். ஏனென்றால் அப்பொழுது இந்த வர்ணமுறைகளை வைத்து அவ்வளவாக சாதி பிரச்சினைகள் வரவில்லை. விசுவாமித்திர மஹரிஷியை எடுத்துக்கொள்ளுங்கள் அவர் பிறப்பால் ஒரு சத்ரியன் ஆனால் தான் கடும்தவம் செய்து ரிக்வேதங்களின் பல சம்ஹிதைகளை கண்டுணர்ந்தவர், ஏன் பிராம்மனர்கள் மிகவும்
புனிதமாக கருதும் காயத்ரி மந்திரத்தை வெளிபடுத்தியவர் அவரே. அவரை பிராம்மனராகவே ஏற்றுக்கொண்டு அவரின் வழிவந்த பரம்பரையை அதாவது கோத்திரத்தை கெளஸிக கோத்திரமென்றே ஏற்றுக்கொண்டிருக்கின்றனர். இதனால் பிறப்பால் ஒருவரின் வர்ணமுறை
ஏற்றுக்கொள்ளப்படவில்லை. சரி அடுத்து நமது தமிழ் திருமறையாம் திருக்குறளை எடுத்துக்கொள்வோம், 'அனைத்து உயிர்களும் பிறப்பால் ஒன்றுதான், ஆனால் அவை
செய்கின்ற தொழில்களால் உயர்வு தாழ்வு என்ற வேறுபாடுகள் இருப்பதால் அவற்றின் சிறப்பியல்புகள் ஒன்றாயிருப்பதில்லை' என்ற கருத்துடன் வரும் பின்வரும் பாடலை சற்று கவணியுங்கள்,

' பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான் ' - 972
இந்த ஒரு குறள் மட்டுமன்று குறள் 134,502,793,956,958,959,1019,1044 போன்ற குறட்பாக்களில் குறிப்பிடப்படும் குலம், குடி, இல் போன்ற சொற்கள் அனைத்தும் உயர்குலம் அல்லது உயர்சாதி என்றே பொருள்படும். குறளில் மட்டும்தானா சாதி அமைப்புகள்
சொல்லப்பட்டிருக்கின்றன தொல்காப்பியம், புறநானூறு, சிலப்பதிகாரம் போன்ற நூல்களிலும் பார்ப்பான், வனிகன், வேளாளன், அரசன் போன்ற சாதி அமைப்பு சார்ந்த வார்த்தைகள் காணப்பட்டிருப்பதை வைத்து காணுங்கால் சாதிய அமைப்புகள் எங்கும் பரவி கிடந்ததை காணலாம் ஆனால் எந்தவொரு சாதி சண்டைகளும் நேரவில்லை என்பதை கவணிக்கவேண்டும். சரி அப்படியென்றால் எப்பொழுதுதான் இந்த சாதி வேறுபாடுகள் வந்தது அதாவது இவன் மேலானவன் இவன் கீழ்ச் சாதியைச் சார்ந்தவன் என்ற வேறுபாடுகள் வந்தது என்பதை நோக்குங்கால் நாம் 'மானவ தருமநூல்' என்னும் நூலிற்கு செல்லவேண்டும். என்னஇது புதிதாக ஒரு நூல் என்று நினைப்பீர்கள். வர்ணமுறைகளை விரிவு படுத்திய நூல் மநுஸ்மிருதியன்றோ என்றால் அதுவேறு இதுவேறு. மநுஸ்மிருதி கீதையையொட்டி ஒவ்வொரு பிரிவிற்கும் உள்ள தொழில்முறைகளை பற்றி கூறுகிறது. ஆனால் மானவ தருமநூல் எனப்படும் நூல்தான் முதன்முதலாக பிரிவினையை உருவாக்கியது, சட்டமாக்கியது. இந்த நூல் யாரால் எழுதப்பட்டது என்றுசற்று கூர்ந்து நோக்குவோம். கி.பி. 5-ம்
நூற்றாண்டில் சாளுக்கிய பேரரசனான இரண்டாம் புலிகேசியின் அவையில் அரங்கேற்றம் செய்யப்பட்ட சட்டநூல்தான் இந்த மானவ தருமநூல். இதற்கு ஆதாரம் இருக்கிறதா என்றால் இதோ,' It also appears highly certain that it was composed about 500 A.D., under the Chalukya soveriegn Pulikecci at Kalyanpuri, and that to the subsequent great extent and power of the west Caulkya dynasty it chiefly owes the wide and great repute it has held, and still holds, in the continent of India. '- The Ordinance of Manu, tr.Arthur Coke., ed., Edward E.Hopkins, 1892, introduction.சரி இந்த புத்தகத்திற்கும் இப்பொழுது நம்மிடம் நடக்கும் சாதி வேறுபாடுகளுக்கும் என்ன சம்பந்தம் என்று சற்று பார்க்கலாம். வேங்கடம் முதல் குமரிவரை எங்கும் நிரவியிருந்த தமிழகத்தின் மீது முதன்முதலில் நிகழ்த்தப்பட்ட படையெடுப்பு களப்பிரர்களின் படையெடுப்பு அடுத்ததாக கன்னடத்திலிருந்து வந்த சாளுக்கியரின் படையெடுப்பு. இவர்கள் சேர,சோழ, பாண்டிய மன்னர்களுடன் நேருக்குநேர் நின்று வென்று வரலாறு படைத்தார்கள். கீழை சாளுக்கியத்தை ஆண்டுவந்த இராசேந்திரன் என்பவன், சோழமாமன்னன் வீரராசேந்திரன் இறந்தபிறகு அங்கு நிலவிய அரசியல் வெற்றிடத்தை பயன்படுத்தி, படையெடுத்து சோழ நாட்டை பிடித்தான். அவனே முதலாம் குலோத்துங்கன் என்னும் பட்டப்பெயர் அடைந்தான். அவனது ஆட்சிக்காலம் கி.பி. 1070-1120. இந்த சாளுக்கிய மன்னன் தான் அரியனை ஏறும்போது சிற்ற்ரசர்கள்
அவனது திருவடிகளின் மீது அருகம்புல்லை வைத்து 'மனுநெறி தலையெடுக்கட்டும்' என்று அவனை வாழ்த்தினர் என்பதை கலிங்கத்து பரணியின் வரிகள் தெளிவுபடுத்துகின்றன, அவற்றை பார்ப்போம்," அறை கழல் அரசர் அப்பொழுது அடிமிசை அறுகு எடுத்திட மறையவர் முடி எடுத்தனர் மனுநெறி தலை எடுக்கவே"இதுமட்டுமின்றி இந்த மாமன்னனுக்கு வலப்புறத்தில் 98 சாதிகளும் இடதுபக்கத்தில் 98 சாதிகளை சார்ந்தவரை அமரச்செய்து வலங்கை, இடக்கை சாதியரென்றும் பிரித்து சாதி வேறுபாடுகளை ஏற்படுத்தியவன் இந்த குலோத்துங்க சோழன்தான் கண்ணன் அல்ல என்பதை இங்கு தெரியபடுத்துகிறேன். கண்ணன் ஏற்படுத்தியது நான்வகை அது எவ்வாறெல்லாம் மாறியது என்பதை இப்பொழுது புரிந்திருப்பீர்கள். போகட்டும் பின் எப்படி இத்தனை பிரிவுகள் வந்தது, அதை கூர்ந்து கவணிக்கவேண்டும். பாரதியாரின் காலத்தில் சூத்திரர்களில் 18 வகையும் நுளைழர்களில் 108 வகையும் இருந்தது என்று பாரதியாரே கூறுகிறார் தன்னுடைய கட்டுரை ஒன்றில். 'இங்கனம் ஜாதிக்கொள்கை வேரூன்றி கிடக்கும் இந்தநாட்டில் மனுஷ்ய ஸ்வதந்திரம், ஸமத்துவம், ஸஹோதரத்துவம் என்னுங் கொள்கை நிலை நிறுத்துவதென்றால் அது சாதாரண வேலையா? கொஞ்ச ஜாதியா? அவற்றில் உட்பிரிவுகள் கொஞ்சமா? பறை பதினெட்டாம், நுளை
நூற்றியெட்டாம். அதாவது பறையருக்குள்ளே 18 பகுதிகளும், நுளையர்களில் 108 வகைகளும் இருக்கின்றதாம். மேலும் பறையன், பள்ளன், சக்கிலியன் எல்லோரும் வெவ்வேறு ஜாதிகள் ஒன்றுக்கொன்று பந்தி போஜனம் கிடையாது. பெண் கொடுக்கல் வாங்கல் கிடையாது. கேலி,
கேலி பெருங்கேலி. இங்கனம் ஏற்கனவே பெருகிகிடக்கும் பிரிவுகள் போதாதென்று புதியபுதிய பிரிவுகள் நாள்தோறும் ஏற்பட்டு வருகின்றன. சீர்திருத்தம் வேண்டுமென்ற நல்ல நோக்க முடையவர்களிலே சிலர் செய்கை நெறியுணராமல் புதிய வகுப்புகள் ஏற்படுத்தி கொள்கிறார்கள்." எவ்வளவு சத்தியமான வார்த்தைகள். ஆனால் இப்பொழுது அரசே recognise செய்திருக்கும் பிரிவுகள் எத்தனை அதை உங்களுக்கே விட்டுவிடுகிறேன்.சரி இந்த சாதி அமைப்புகளையும் வேறுபாடுகளையும் வளர்த்தது யார்? அந்த கன்னட மன்னனனா, கண்ணனா? இனி நாம் செய்யவேண்டியது என்ன, அதையும் பாரதியாரே கூறுகிறார் " ஜனங்களிடம் பூசாரிகள் எதையும் மறைக்காமல், எந்த விஷயத்திலும், ஜனங்களை ஏமாற்றாமல்
விஷயத்தை சொல்லவேண்டும். கடவுள் எங்கும் இருக்கிறாரே? எல்லாம் கடவுள்தானே? ஊருக்கு நடுவில் கோவில்கட்டி அதில் கல்லையோ ஒரு செம்பையோ நட்டு அங்கேதான் எல்லோரும் குமபிடவேண்டும் என்ற நியமம் எதற்காக? என்றால் ஜனங்களுக்குள் ஐக்கியம்
ஏற்படுவதற்காக தான். " மறுபடியும் சொல்கிறேன் கண்ணன் காட்டிய பாதை மிகவும் நல்ல பாதை அதை கடைபிடிப்போம்......மண்ணிக்கவும் சிறு விளக்கம் என்று ஆரம்பித்து மிகவும் பெரியதாக போய்விட்டது. Topic அந்த மாதிரி...... தொடர்ந்து படியுங்கள் உங்கள் கருத்துக்களை
தெரிவியுங்கள் நான் மேற்கூறியவற்றில் பிழையிருப்பின் தெரியபடுத்துங்கள்.

Saturday, February 12, 2005

திரு Srikanth, உங்களின் கேள்வி நியாயமானதே. வேதங்களைப் பற்றி எழுதும் முன் பல்வேறு புத்தககங்களை படித்துப் பின்னர்தான் எழுதவே ஆரம்பித்தேன். முதலில் எடுத்துக்கொண்ட புத்தகம் ராஜாஜியுடையது பிறகு காஞ்சி மகாப் பெரியவரின் புத்தகங்கள். நீங்கள் கேட்ட கேள்விக்கு நான் பதில் கூறுவதைவிட இதோ.......
அப்போது வேத வியாஸருக்கு அந்தப் பேர் இருக்கவில்லை. அவருடைய (இயற்) பெயரும் கிருஷ்ணர் என்பதுதான். தீவில் (த்வீபத்தில்) பிறந்தவராதலால் த்வைபாயனர் என்பார்கள். கிருஷ்ண த்வைபாயனர், பாதராயணர் என்ற பேர்கள் அவருக்கு இருந்தன. 'பதரி'என்னும் இலந்தை மரத்தடியில் தபஸ் பண்ணியதால் பாதராயணர் என்றும் அவரைச் சொல்வார்கள். பல மஹரிஷிகளின் மூலமாக லோகத்துக்கு வந்திருந்த 1180 வேத சாகைகளும் கிருஷ்ண த்வைபாயனருக்குத் தெரியும். அக்காலத்தில் அதெல்லாம் கலந்து ஒரே பிரவாஹமாகத்தான் இருந்தது. அதில் நிறைய கிரஹிக்கும் சக்தி பூர்விகர்களுக்கு இருந்தது. அவதார புருஷரானதால் த்வாபரக் கடைசியில் பிறந்த போதிலும் கிருஷ்ண த்வைபாயனருக்கே அத்தனையையும் க்ரஹிக்கும் சக்தி குறைந்த நமக்காக அவர் அவற்றை
நாலு வேதங்களாகவும், அதில் ஒவ்வொன்றிலும் இன்னின்ன சாகை என்றும் பிரித்தார். ஒரு DAM போட்டுப் பெரிய பிரவாஹத்திலிருந்து பல வாய்க்கால் வெட்டி விடுகிற மாதிரி நாலு வேதங்கள், அவற்றின் சாகைகள் என்று விபாகம் (பகுப்பு) செய்தார். அது அவருடைய யோக மகிமை, தபஸின் வலிமை. இவற்றில் பிரார்த்தனா ரூபமான ரிக்வேத சாகைகள், யக்ஞ விதிகளின் ரூபமான யஜுஸ் சாகைகள், கான ரூபமான ஸாமவேத சாகைகள், ஆபத்துக்களைப் போக்கிக் கொள்வதற்கும் சத்ருக்களை நாசம் பண்ணுவதற்குமான மந்திரங்களையும் யக்ஞங்களையும் முக்யமாகக் கொண்ட அதர்வ சாகைகள் எல்லாம் இருந்தன.
தேவர்கள் ரொம்பவும் ஸந்தோஷப்படுத்துவதற்காக ஸாமவேதத்தில் அதிகப்படியான சாகைகள் இருந்தன 1180ல் ஆயிரம் சாகைகள் ஸாமவேதத்திலேயே இருந்தனவாம். ரிக் வேதத்தில் 21 சாகைகள் இருந்தன. யஜுர் வேதத்தில் 109 இருந்தன. (சுக்ல யஜுஸில் 15;
கிருஷ்ணயஜுஸில் 94) அதர்வ வேதத்தில் 21 சாகைகள்இருந்தன. 1180 என்பது விஷ்ணுபுராணத்தில் வருவதாக ஒரு பண்டிதர் எடுத்துக் காட்டிய கணக்காகும். இதற்குக் கொஞ்சம் வித்யாஸமாக இன்னொரு கணக்கும் இருக்கிறது. அதன்படி ரிக் வேதத்தில் 21 சாகைகள்;யஜுஸில் 101;ஸாமத்தில் 1000;அதர்வத்தில் 11; மொத்தம் 1133 சாகைகள்.
இனிமேல் வரப்போதும் கலிகால ஜனங்கள் அல்ப சக்தர்களாகவே இருப்பார்களாதலால் இந்த ஆயிரத்து நூற்றுச் சொச்சத்தில் ஒரு சாகையை அத்யயனமும் அநுஷ்டானமும் பண்ணினால் போதும் என்று கிருஷ்ண த்வைபாயனர் கருதினர். பகவத் ஸங்கல்பமே அவருக்கு இந்த
எண்ணத்தைத் தந்தது. அதனால் ஒருத்தரே பல வேதங்களைக் கற்றுக்கொள்கிற பழைய முறைபோய், ரிக், யஜுஸ், ஸாம, அதர்வங்களில் ஏதாவது ஒன்றிலே ஒரு சாகையைப் படித்து மனப்பாடம் பண்ணி, அதன்படி செய்தால் போதும் என்ற புது ஏற்பாட்டைச் செய்தார். தம்
சிஷ்யர்கள் நாலு பேரில் ஒவ்வொருவரிடம் ஒரு வேதம் என்று பிரித்துக் கொடுத்து, 'இதன் சாகைகளை நீங்கள் பிரசாரம் செய்யுங்கள்'என்று ஆக்ஞை பண்ணினார். ரிக்வேத சாகைகளைப் பைலர் என்ற சிஷ்யரிடமும், இப்படியே யஜுஸை வைசம்பாயனரிடமும், ஸாமத்தை
ஜைமினியிடமும், அதர்வத்தை சுமந்து என்பவரிடமும் கொடுத்துப் பிரசாரம் செய்ய வைத்தார்.
இப்படி ஒரு ஜீவனுக்கு இது போதும் என்று வேதத்தை நாலாகவும், அந்த நாலை 1180 சாகைகளாகவும் பிரித்துக் கொடுத்ததாலேயே, கிருஷ்ண த்வைபாயனருக்கு 'வேத வ்யாஸர்'என்ற காரணப்பெயர் உண்டாயிற்று. வ்யாஸம் என்றால் கட்டுரை, ESSAY, COMPOSITION என்று அர்த்தம். ஒரு விஷயத்தை மட்டும் பிரித்து எடுத்துக்கொண்டு விளக்குவதால் அதற்கு வியாஸம் என்று பெயர் வந்தது. பல விஷயங்கள் இருக்கிறபோது,
ஒவ்வொரு பொருள் பற்றியும் (SUBJECT WISE-ஆக) விபாகம் பண்ணுவது (பிரித்து CLASSIFY பண்ணுவது) தான் வியாஸம். ஏகப்பட்டதாக இருந்து வந்த வேதசாகைகளைத் தீர்மானமாக இது போதும் என்று பிரித்து விபாகம் செய்ததாலேயே, க்ருஷ்ண த்வைபாயனருக்கு வேத வ்யாஸர் என்ற பெயர் வந்துவிட்டது.


மேற்கண்டவை நம்முடன் வாழ்ந்த மகான் காஞ்சி மகாப்பெரியவர் அவர்களின் கருத்து. இதே கருத்தினைத்தான் நம் மகான்கள் பலரும் தெரிவிக்கின்றன்ர். இவற்றைப் பற்றிய குறிப்பு இல்லாமல் அவ்வாறு தெரிவிக்கமாட்டார்கள். ஏன் இராமாயணம் மட்டுமல்ல ஏன் பகவத்கீதையிலும் கிருஷ்ணன் ஒன்பதாம் அத்தியாயத்தில்

பிதாஹமஸ்ய ஜகதோ மாதா தாதா பிதாமஹ
வேதயாம் பவித்ரம் ஓம்கார ரிக் சாம யஜீர் ஏவச

வேதங்களில் நான் ரிக், யஜீஸ், சாமம் என்று கிருஷ்ணரே கூறியிருப்பதாலும் வேதங்களின் பிரிவுகளைப் பற்றி சந்தேகம் வரலாமே.....நல்லது இதுபோன்று தங்களின் கருத்துக்களை அடிக்கடி தெரிவியுங்கள்.

Tuesday, February 08, 2005

மகள்: அப்பா ஒரு கதை கூறுகிறேன் என்றீர்கள்......
தந்தை: ஆம் ஒரு சுவாசரியமான கதை......இந்த கதை கேனோபநிஷத் எனும் உபநிஷத்தில் மூன்று மற்றும் நான்காம் காண்டத்தில் வருகிறது. பிரம்மத்தை பற்றிய கதை. ஒரு சமயம் மேலோகத்தில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே கடுமையான போர் நிகழ்ந்தது. ஒரு சமயத்தில் அசுரர்களின் கை ஓங்கியிருந்த சமயத்தில் பரம்பொருளான அந்த பிரம்மம் தனது சக்தியை வெளிபடுத்தி தேவர்களின் பக்கமிருந்து வெற்றியை தேவர்களுக்கு ஈட்டுச்சென்றது.
மகள்: அப்பா பிரம்மம் என்றால் என்ன? அது எவ்வாறு இருக்கும்?
தந்தை: என்ன நீ அதற்குள் கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டாய்., சரி பிரம்மம் என்பது பரமேஸ்வரன் அந்த நாராயணனே தான். அவன் கண்ணுக்கு புலப்படமாட்டான். அவ்வளவு சூஷ்மமானது. அந்த நாரணன் தங்கள் பக்கமிருந்துதான் தாம் வெற்றி பெற்றோம் என்பது அறியாமல் தேவர்கள் தங்கள் சக்தியால்தான் வெற்றிபெற்றோம் என்று மிதப்பில் ஆழ்ந்திருந்தனர். பரமேஸ்வரன் யோசித்தான் தேவர்களுடைய ஆணவம் அவர்களுக்கு முன்னேற்றத்தை தராது அவர்களை திருத்த வேண்டும் என்று எண்ணம் கொண்டு ஒரு அழகிய கந்தருவ வேடம் கொண்டு தேவர்கள் முன் நின்றான். தேவர்கள் திகைப்புற்றனர், யாரடா இது புது வடிவாயிருக்கிறதே என்று குழம்பிப்போய் அக்கினியை நாடினர். அக்கினியும் அந்த இயக்க வடிவத்திடம் யார் என்று கேட்டான். அதற்கு அந்த இயக்கன் நீ யார் என்று திரும்பி கேட்டான். அதற்கு அக்கினி நான் அக்னி தேவன் என்னை 'ஜாதவேதஸ்' என்று அழைக்கும் அளவுக்கு பிரசித்தி பெற்றவன். என்று கூறியதும், இயக்கன் உடனே அவ்வளவு பிரசித்தி பெற்ற உன்னிடம் என்ன திறமை உள்ளது? என்று கேட்டதும் அக்கினி நான் எல்லா வடிவிலுமிருக்கிறேன் நான் இருக்கும் எவற்றையும் எரித்துவிடுவேன்., உடனே இயக்கன் எங்கே இந்த வைக்கோலை எரி பார்ப்போம் என்றதும் அக்கினி தன் முழு திறமையையும் பயன்படுத்தி பார்த்தான் முடியவில்லை.
மகள்: அப்புறம் என்னஆயிற்று?
தந்தை: சொல்கிறேன் கேள், அக்கினி உடனே தேவர்களிடத்துச் சென்று தன்னால் அந்த வைக்கோலை எரிக்க முடியவில்லை என்றதும் அவர்கள் அடுத்த பலசாலியான வாயுதேவனை அனுப்பினர். வாயுதேவனும் உடன் சென்று என்னை அனைவரும் 'மாதரிச்வா' என்று அழைப்பர் என்று கூறியதும், இயக்கன் உன்னிடம் என்ன சக்தி உள்ளது? என்று கேட்டான். சரி இங்கே இயக்கன் யார் சொல்லு பார்ப்போம்....
மகள்: பரமேஸ்வரன் அந்த நாராயணனே.... சரி தானே...
தந்தை: சரி வாயுதேவன் உலகிலுள்ள எல்லா பொருள்களையும் என்னால் தூக்கமுடியும் என்று சொன்னதும் இயக்கன் எங்கே இந்த வைக்கோலை கொஞ்சம் தூக்கு பார்க்கலாம் என்றான். வாயுதேவன் முழு சக்தியையும் உபயோகித்து பார்த்து தோற்றுப்போனான். இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த தேவர்கள் மிகவும் குழம்பிப்போனார்கள் ஏனென்றால் தேவர்களிளேயே சக்திவாய்ந்தவர்கள் அக்னியும் வாயுவும் தான். அவர்களால் இந்த இயக்கன் கூறுவதை செய்ய முடியவில்லை, பயந்துபோன அவர்கள் உடனே இந்திரனிடம் போய் நடந்ததை சொன்னார்கள். இந்திரன் வியப்புற்று அந்த இடத்திற்கு விரைந்தான் ஆனால் அந்த இடத்தில் இயக்கன் மறைந்து உலகிலேயே மிகவும் அழகான பெண் ஒருத்தி நின்றுகொண்டிருந்தாள் அவள்தான் உமாதேவி என்னும் பராசக்தி....அவளிடம் சென்று வந்தது யார் என்று வினவினான். உடனே உமாதேவி வந்தது வேறுயாருமில்லை பரபிரம்மமே என்று விளக்கியவுடன் தன் அகங்காரம் ஆணவம் அனைத்தையும் விட்டொழிந்தான் இந்திரன் மற்றும் அனைத்து தேவர்களும். இதில் விளங்கும் உண்மை என்னவென்றால் பரம்பொருளை அறிய உண்மையான ஆத்மஞானம் பெற 'நான்' என்ற மனோபாவம் ஒழியவேண்டும். அகந்தை அறவே ஒழிந்தால்தான் பரம்பொருளின் அருள்கிட்டும். பிரும்மம் என்பது மிகவும் நுட்பமான ஊசி நுனியைப் போன்றது.
மகள்: ஆகா ஒரு சிறிய கதையில் இத்தனை தத்துவங்களா?
தந்தை: அந்த காலத்தில் வேதாந்தங்களை பரப்ப இதுபோன்ற சிறிய கதைகளை பயன்படுத்தினார்கள். அந்தகாலத்தின் ரிஷிகள்.
மகள்: இந்த கேனோபநிஷத் எந்த வேதத்தின் கீழ் வருகிறது.?
தந்தை: இது சாமவேதத்தை சார்ந்தது. இதன் முதற்சுலோகத்தில் சீடன் குருவிடம் நான்கு கேள்விகளை கேட்கிறான் 'எவரால்' என்று பொருள்படும் வடமொழி சொல்லான 'கேன' என்ற வார்த்தையுடன் இந்த உபநிஷத் ஆரம்பிப்பதால் இதற்கு கேனோபநிஷத் என்ற பெயர் வந்தது. பிரம்மத்தை பற்றி முழுமையாக அறிந்துகொள்ள இந்த உபநிஷத் உதவும்.
மகள்: அருமையப்பா.
தந்தை: பிறகொருநாள் கடோபநிஷத் பற்றி சொல்கிறேன். ஒரு அருமையான உபநிஷத் அது. நசிகேதனுடைய கதையும் அவன் யமதர்மராஜனுடன் உரையாடுவதும் தான் கடோபநிஷத்.
மகள்: சரியப்பா பின்னர் சந்திப்போம்....

Monday, February 07, 2005

மகள்: அப்பா உபநிஷத் என்றால் என்ன? அவை ஏன் உருவாக்கப்பட்டது. அந்த உபநிஷத் கூறும் வழிமுறைதான் என்ன?
தந்தை: உபநிஷத்தை பற்றி சொல்வதென்றால் சொல்லிக்கொண்டேயிருக்கலாம் அவ்வளவு உள்ளது இந்த உபநிஷத்தில். உப என்றால் அருகில் என்று பொருள். நி என்றால் நிச்சயம் என்று அர்த்தம்., ஷத் என்றால் களைதல் என்று அர்த்தம். அதாவது மனதில் காணப்படும் துன்பங்களை களைந்து ஆத்மஞானத்தை வளர்ப்பித்தல் என்று அர்த்தமாகும். இதன் முழு அர்த்தம் என்னவென்றால் நீ ஒரு ஆசிரியரிடத்தில் பாடம்
கற்றுக்கொள்கிறாய் என்று வைத்துக்கொள்வோம் அப்படி பாடம் நடத்திக்கொண்டிருக்கும் ஆசிரியரிடத்தில் நீ ஒரு சந்தேகம் கேட்டு அதற்கு ஆசிரியர் விளக்கம் தந்து நீ புரிந்து கொண்டாய் எனில் நீ அந்த குறிப்பிட்ட ஞானத்தை அடைகிறாய் அதேபோன்று வேதங்களில் பல புரியாத மந்திரங்கள் இருக்கும் அவற்றை ஒரு குருவிடம் கேட்டு ஞானம் அடையும் சீடனுக்கும் குருவுக்கும் இடையில் நடக்கும் உரையாடல்தான் உபநிஷத். ஏன் நீ சந்தேகம் கேட்டு நான் விளக்கமளிக்கிறேனே அதுவும் ஒருவகையில்
உபநிஷத் என்றும் அர்த்தப்படுத்திக்கொள்ளலாம். ஆனால் உபநிஷத் தூய்மையானவை அவற்றை கொச்சைப்படுத்தக்கூடாது. வழிமுறையைப் பற்றிக்கேட்டாய், இந்த வாழ்க்கையின் வழிமுறைகளையே உபநிஷத்துக்கள் கூறுகின்றன.

மகள்: அப்பா மொத்தம் எத்தனை உபநிஷத்துகள் இருக்கின்றன? அவற்றில் முக்கியமானவை என்று ஏதேனும் உண்டா?
தந்தை: வேதங்களை தொகுக்கும்பொழுது வியாசர் நான்கு வேதத்திற்கும் மொத்தம் 1180 சாகைகளாக பிரித்தார். சாகை என்பது பிரிவு (Division). ஆனால் இப்பொழுது புழக்கத்தில் இருப்பது 6 சாகைகள்தான் கேட்பதற்கே ஒருமாதிரியாக உள்ளதா?. ரிக் வேதத்திற்கு ஒரே ஒரு சாகைதான், ஐதரேய சாகை. யஜீருக்கு மூன்று சாகைகள் அதாவது காண்வ, தைத்திரீய, மாத்யந்தின சாகை என்று. ஸாம வேதத்தில் கெளதம, தலவகார சாகை என்று இரண்டும் உள்ளது. அதர்வண வேதத்தில் ஒரு சாகைகூட புழக்கத்தில் இல்லை. இந்த சாகைகளுக்குள் கர்ம காண்டம், ஞான காண்டம் என்று இரு பிரிவுகள் உள்ளது. இதில் ஞான காண்டம் எனப்படுவதே உபநிஷத் ஆகும். இந்த உபநிஷத் வேதாந்தம் என்றும் அழைக்கப்படும். இந்த உபநிஷத்துகளில் ஈஸாவாஸ்யம் மற்றும் கடோபநிஷத் மிகவும் சிறப்பானதாகும்.
மகள்: நீங்கள் நிறைய பிரித்து பிர்த்து வாயில் நுழையாதவைகளை கூறுகிறீர்கள்.
தந்தை: நீ கேட்டதனால் நான் சொல்லவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டேன். சரிசரி போதும் உனக்கு இன்னொரு நாள் கதையாக கூறுகிறேன் சரியா?
மகள்: கதையா இப்பொழுதே கூறுங்களேன்.....
தந்தை: நான் சொன்னவற்றை கொஞ்சம் யோசித்துக் கொண்டிரு பிறகு சொல்கிறேன் சரியா.....

Monday, December 20, 2004

மகள் : அப்பா மறுபடியும் சந்தேகம்.......
தந்தை : என்ன மறுபடி ஆரம்பித்துவிட்டாயா?
மகள் : அப்பா பிரம்மாவுக்கு எவ்வளவு வயதிருக்கும்?
தந்தை : அதற்கு முன் உனக்கு எத்தனை யுகங்கள் என்பது பற்றி சொல்லவேண்டும். வேதங்களிலும் புராணங்களிலும் மொத்தம் நாண்கு யுகங்கள் காணப்படுகின்றன. அவை க்ருதயுகம், த்ரேதாயுகம், த்வாபரயுகம், கலியுகம்., நாம் இப்போது இருப்பது இந்த கலியுகத்திலே. அதுமட்டும்தானா ஒவ்வொரு யுகத்திலும் மனிதர்கள் எவ்வாறு இருப்பார்கள் அவர்களின் வலிமை ஆயுள் எல்லாம் முன்னமே கணக்கிடப்பட்டிருக்கின்றது. சரி இப்பொழுது உன் கேள்விக்கு வருகிறேன்.... பிரம்மாவுக்கு வயது எவ்வளவுயிருக்கும்? ஒரு பேப்பர் பேனா கொண்டுவா கொஞ்சம் கணக்கிடுவோம் சரியா?
மகள் : சரிப்பா பேப்பரில்லாமல் கணக்கிடமுடியாதா?
தந்தை : உன்னால் முடியுமென்றால் சரி.....
மகள் : இல்லை இதோ வருகிறேன்.....
தந்தை : சரி கணக்கு போடு பார்ப்போம். இப்பொழுது நாம் கணக்கிடும் நாள் வருடக் கணக்குத்தான் சரியா?
மகள் : சரிப்பா....
தந்தை : க்ருத யுகம் 1728000 வருடங்களும், த்ரேதாயுகம் 1296000, த்வாபரயுகம் 864000, கலியுகம் 432000 வருடமாகும். இது போன்ற நாண்கு யுகமும் சேர்த்து பிரம்மாவுக்கு ஒர் இரவாகிறது அதே போன்று ஓர் பகலுமாகிறது. ஆக பிரம்மாவுக்கு ஒரு நாள் என்றால் எத்தனை வருடங்கள் சொல்லு பார்க்கலாம்.....
மகள் : ம்....ம்....8640000 வருடங்கள் ஒரு நாள் பிரம்மாவுக்கா?...
தந்தை : ஆம்.....இப்பொழுது பிரம்மாவுக்கு வயது என்ன தெரியுமா 50 வருடமாகிறது.....அப்போ எத்தனை வருடங்களுக்கு முன் பிரம்மா தோன்றியிருப்பார் சொல்லு பார்க்கலாம்........
மகள் : இருப்பா கொஞ்சம் கால்குலேட்டரை எடுத்து கணக்கு பார்த்துச் சொல்கிறேன் ......
தந்தை : ம்..... சொல்லு......
மகள் : 157680000000 வருடங்கள்......அம்மாடியோவ்......
தந்தை : அதாவது 15768 கோடி வருடங்கள்.... பிரம்மாவுக்கு இந்த வயதாகின்றது என்றால் அவரை படைத்த பரமேஸ்வரனுக்கு வேண்டாம் விட்டுவிடுவோம் என்கிறாயா?
மகள் : இதற்கெல்லாம் ஆதாரம் இருக்கிறதா அப்பா?
தந்தை : உண்டு கண்ணா.... நான் ஆவணி அவிட்டத்தில் பூணூல் மாற்றும் பொழுது சில மந்திரங்கள் சொல்வேன் நீயும் கேட்டிருப்பாய் அதில் சங்கல்பம் என்று ஒன்று உண்டு
...ப்ரவர்த்தமாநஸ்ய ஆ அத்ய ப்ரஹ்மண:
த்விதீயபரார்த்தே ‚ஸ்வேதவராஹ
கல்பேவைவஸ்வதபந்வந்தரே கலியுகே......
என்று கூறுவேன் நீயும் பார்த்திருப்பாய் இதில் பின் வரும் மந்த்ரத்தில் இன்ன மாதம் இன்ன திதி இன்ன நட்சத்திரம் என்றெல்லாம் கூறி சங்கல்பம் செய்வேன் இதிலிருந்துதான் பிரம்மாவுக்கு இத்தனை வருடம் ஆகின்றது என்று கணக்கிட முடிகிறது.
மகள் : அடேங்கப்பா இவ்வளவு சரியாக கணிக்க கூடிய அளவில் வேதங்களில் கணக்கிட முடிகிறதா?
தந்தை : நீ வேறு வேதத்தில் அந்தப் பொழுதில் இருந்த நட்சத்திரங்கள் அதாவது வானத்தில் உள்ள நட்சத்திர அமைப்பை பற்றிய குறிப்புக் காணப்படுகிறது அதை வைத்து பாலகங்காதர திலகர்...
மகள் : திலகரா.... அவர் சுதந்திர போராட்ட வீரரல்லவா....?
தந்தை : ஆம் ஆனால் ஒரு மிகப்பெரிய வேதப்பண்டிதரும் கூட... சரி விசயத்திற்கு வருகிறேன் அவர் அந்த நட்சத்திர அமைப்பினை கணக்கிட்டு சரியாக வேதக்காலத்தை கணக்கிட்டிருக்கிறார் அவர் கணக்கின்படி கி.மு.3000 வேதகாலம் என்று அரிதியிட்டு கூறுவார். ஆனால் நமது காஞ்சி மஹாப் பெரியவர் என்ன சொல்வார் தெரியுமா ஏன் இதுபோன்ற வான் அமைப்பு முன்னர் இருந்திருக்கக்கூடாது ஏன் கி.மு 6000 ஆக இருக்கக்கூடாது என்பார். ஆனால் முன்னமே சொன்னது போன்று வேதங்களின் காலத்தை நம்மால் கணக்கிடமுடியாது......
மகள் : அப்பா எனக்கு பிரமிப்பாக இருக்கிறது.....
தந்தை : இதற்கே இப்படியென்றால் இன்னமும் நிறையயிருக்கிறது சரிசரி ரொம்ப நேரமாகிவிட்டது பிறகு ஒரு நாள் பார்க்கலாம்.......

Sunday, December 19, 2004

ஒரு தந்தையும் மகளும் உரையாடுவது போல்..................
மகள் : அப்பா நீங்கள் வேதங்களைப் பற்றி நன்கு அறிந்தவர்கள் இப்போ நக்கீரன்ல வர்ர
கட்டுரையை படித்தபின்னர் எனக்கு ஆவலாக உள்ளது. எனக்கு சற்று கூறுங்களேன்..........
தந்தை : மகளே உனக்கு சரியான பருவம் வந்தபிறகு சொல்லலாமென்றிருந்தேன் நீயோ
கேட்டுவிட்டாய் சொல்கிறேன் கேள்...........நமது இந்துமதம் தர்மத்தையே பிரதானமாக கொண்டது. ஒரு மனிதன் எவ்வாறெல்லாம் இருக்கவேண்டும் எப்படி கூடாது என்பதையெல்லாம் நமது புராணங்களில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. அதன்படி நடப்போமாயின் நமக்கு நிச்சயமாக எங்கும் நிறைந்திருக்கும் பரமேஸ்வரனை உணரலாம்.இந்த இந்து என்கிற வார்த்தையே ஈரானியர்களின் படையெடுப்பிற்கு பிறகுதான் வந்தது. அவர்களுக்கு உச்சரிப்புத்தன்மை சற்றேக்குறைவு. அந்த ஈரானியர்கள் நம்மீது படையெடுத்து வரும்போது சிந்து நதியைக் கடக்கவேண்டியிருந்தது. அப்படியும் அவர்கள் கடந்து வந்தபின் அங்கு ஒரு சீரிய நாகரீகத்துடன் காணப்பட்ட மக்களைப் பார்த்தார்கள், அவர்களுக்கு அந்த ஈரானியர்கள் வைத்த பெயர்தான் இந்து. சிந்துவாசிகள் என்பது அவர்கள் வாயினின்று 'இந்து' என்றாயிற்று. இதேதான் பின்னாளில் இந்துஸ்தான் என்றும் இந்தியா என்றும் ஆகிற்று.இந்த பிரபஞ்சம் படைக்கும் போதே வேதங்களும் படைக்கப்பட்டுவிட்டன. அவை பரமேஸ்வரனின் மூச்சுக்காற்றாகும். இந்த வேதங்கள் ஒலியை மையமாகக் கொண்டேயிருக்கின்றன. ஸ்ருதியென்றும் வேதங்களை அழைப்பர்.
மகள் : அப்பா ஒரு சந்தேகம் இந்த பிரபஞ்சத்தை படைத்தது பிரம்மாவென்றும் கூறப்படுகிறதே அப்போ அவருடைய மூச்சுக்காற்றுதான் வேதங்களா.............
தந்தை : இல்லை மகளே..... பரமேஸ்வரன் என்பவன் எல்லோருக்கும் மேலானவன். அவனால்
உருவாக்கப்பட்டவர்களே பிரம்மா சிவன் மற்றும் நாராயணன். பின்னாட்களிலே வந்த புராணங்கள் சிவனையும் நாராயணனையும் மையபடுத்திவிட்டன..........அந்த பரமேஸ்வனின் மூச்சிலிருந்து வந்த வேதங்களை வைத்தே பிரம்மா இந்த பிரபஞ்சத்தை
படைத்தான். இதற்கான ஆதாரங்கள் எல்லாம் வேதங்களிலிருக்கிறது.
மகள் : அப்பா ஒரு சந்தேகம். இந்த வேதங்களை வைத்துதான் பிரம்மன் படைத்தானென்றால்
அதே வேதங்களை வைத்து நம்மாலும் பிரபஞசங்களை படைக்கமுடியுமா?
தந்தை : முடியும் நம்மாலும் முடியும் ஆனால் அதற்கு முன்னர் நாம் மிகவும்
தூய்மையானவர்களாக அந்த வேதங்களில் சொல்கின்ற வாழ்க்கையை வாழவேண்டும்.........
மகள் : வேதங்கள் ஒலிவடிவானது என்றீர்களே. ஆனால் நமக்குபுத்தகமாகவல்லவாயிருக்கிறது.?
தந்தை : ஆரம்பத்தில் ஏன் இப்பொழுதும் கூட பல்வேறுபட்ட வேதங்கள் இந்த பிரபஞ்சத்திலே
உலவிக் கொண்டிருக்கின்றன..... அவற்றை அடைய அவற்றை கேட்க நமக்கு தெய்வீக் காதுகள் வேண்டும்.............
மகள் : தெய்வீகக் காதுகளா? அப்படியென்றால்........
தந்தை : ஆம் எங்கும் பரவியிருக்கும் அந்த மந்த்ர ஒலிகள் நம் காதிற்குள்ளும் போய்தான்
வருகிறது........... அதை உணர்வதற்கு இப்பொழுது டி.வி.யிருக்கிறது அதில் ஒரு நிகழ்ச்சியை ஒரு பாடலை பார்த்துக்கொண்டிருக்கிறாய்..........அந்தப் பாடல் அந்த டி.விக்குள்ளேயே நடந்துக் கொண்டிருக்கிறது? அது என்றோ படமாக்கப்பட்ட காட்சியை எங்கோ ஒரு இடத்திலிருந்து
ஒளிபரப்பி நமக்கு அதை காட்சி வடிவமாக மாற்றித்தர ஒரு சாதனம் தானே இந்த டி.வி.
இல்லையா.....அந்த டி.வி.சிக்னல் நம்மை கடந்தும்தான் செல்கிறது............ஆனால் நம்மால் அந்தக் காட்சியை உணரமுடிகிறதா? இல்லையே இதுபோன்றுதான் ஆதிகாலத்தில் முனிவர்கள் கடுந்தவம் செய்து திடீரென்று தன்னுள் ஒலித்த ஒலியை வார்த்தைகளாக்கினார்கள்........ அவையே மந்த்ரமென்றும் வேதங்கள் என்றும் கூறுகின்றோம்.
மகள் : ஏன் இந்தகாலத்தில் இதுபோன்ற முனிவர்கள் இல்லை? வேதங்களை
படைக்கவில்லை........?
தந்தை : மகளே இப்பொழுது நடைபெற்றிருக்கும் யுகம் கலியுகம்..... ஆரம்பத்தில் வேதங்கள் ஒரே தொகுப்பாகத்தான் இருந்தது. இப்பொழுது இருப்பதுபோல் ரிக் - யஜீர் - சாம - அதர்வணம்
என்றெல்லாம் கிடையாது. கலியுகத்தில் இருக்கும் மக்களுக்கு வலிமை, புத்திக்கூர்மை, ஆயுள்
போன்றவை கம்மி அவர்களால் முழுவதுமாக புரிந்து கொள்ளமுடியாது என்ற எண்ணம்
கொண்டே வியாசர் இந்த வேதங்களை பிரித்துத் தொகுத்தார். அதோடு மட்டுமில்லாமல் தனது சீடர்களாகிய சுமந்து, வைசம்பாயனர்,ஜைமினி,பைவர் என்பவர்களுக்குக் கற்றுக் கொடுத்து
பரம்பரை பரம்பரையாக விருத்தி செய்ய ஏற்பாடு செய்தார்.
மகள் : அப்படி நீங்கள் கூறுவதுபோல் ஆரம்பத்திலிருந்து வியாசர் தொகுக்கும்வரை ஒன்றாக
இருந்த வேதங்களில் ஏன் சிலபல மந்த்ரங்கள் விட்டிருக்கக்கூடாது?
தந்தை : ஆம் நீ சொல்வது சரிதான் வியாசர் வேதங்களை தொகுக்கும் பொழுது எவையெல்லாம் பிரயோகிக்கப்பட்டிருந்ததோ அவற்றை தொகுத்திருக்கலாம்..... அதான் நான் முன்னமே இன்னமும் இந்த வேதங்கள் எங்கும் நிறைந்திருக்கின்றன் நம்மால் அவற்றை அடையமுடியவில்லை. சரிபோகட்டும் தொகுத்தவற்றை காக்கிறோமா என்றால் அதையும் செய்யாதிருக்கிறோம்.
மகள் : அப்பா ஒரு சந்தேகம் வேதங்கள் எந்த மொழியில் இருக்கிறது?
தந்தை : அவற்றிற்கு மொழி கிடையாது அவை ஒலி வடிவினுடையது............நாம் அவற்றை
வார்த்தைகளாக்க அப்பொழுதுயிருந்த மொழியான சமஸ்கிருதத்தை பயன்படுத்துகிறோம்.
மகள் : அந்த சமஸ்கிருதம் இப்பொழுதுயிருக்கிறதா?
தந்தை : நாம் இழந்துவிட்டோமென்றே சொல்லலாம்..........இப்பொழுது நமது தாய்மொழியாக
தமிழிருக்கிறது.........அதுவும் தூய்மையானதாகவாயிருக்கிறது.............நம் கண்ணெதிரில் இப்படி
அழிந்து கொண்டிருக்கும் தமிழையையாவது காப்போம்...............
மகள் : கண்டிப்பாக அப்பா........ நமது இரு மொழிகள் என்றே நாம் சொல்லலாம்...........
தந்தை : உனக்கு ஹோம் ஒர்க் இருக்கு இல்ல அதை முடிச்சிட்டுவா பிறகு பேசுவோம் என்ன?மகள் : சரியப்பா நம்முடைய பூர்வீகம் பற்றி இப்பொழுதுதான் அறிகிறேன் எவ்வளவு
தூய்மையானது நம் பூர்வீகம்.........
உரையாடல் தற்சமயம் முடிந்தது............
 
Free Web Counters
Web Hit Counters

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது