வேதங்களில் பல சிறிய கதைகள் உள்ளன. வேதங்கள் மொத்தமே இவ்வளவுதானா என்று நமக்குத் தோன்றிய எண்ணம் ஒரு சமயம் பரத்வாஜ மகரிசிக்குத் தோன்றியது, அவர் கடும்தவம் செய்தாராம் அதுவும் அவரின் மூன்று ஆயுஸ் காலத்திற்கும் மேலாக முழு வேதங்களையும் அடைய வேண்டும் கற்றறிய வேண்டும் என்று பிரத்தனப்பட்டாராம். பின்னர் ஒருநாள் பகவான் அவர் முன் தோன்றி மலைகள் இருக்குமிடத்திற்கு அழைத்துச்சென்றாராம், அங்கு ஒரு கைபிடி மண்ணை எடுத்துக்கொண்டு பரத்வாஜரிடம் நீவீர் கற்றது இந்த கையிலிருக்கும் மண் அளவிற்குதான் நீங்கள் கற்காத வேதங்கள் இந்த மலைகளைப் போன்று உள்ளது அதற்கு நீவீர் எத்தனை கடும்தவம் செய்தாலும் முடியாது என்றாராம். இந்தக் கதை எதற்கு என்றால் நம்மிடம் கிடைத்துள்ள வேதங்கள் ஒரு சிறிய அளவுதான் இதுபோன்று வேதங்கள் அண்டசராசரம் எல்லாம் வியாபித்திருக்கும் நம் கடும்தவத்திற்கு பிறகுதான் அவை கிடைக்கப்பெறும்..........இந்தக்காலத்தில் அவையெல்லாம் சாத்தியமா...........எல்லாமே சப்தங்கள் தான் வேதங்கள் தான் நம் அனைவரின் மூச்சிலும் ஸ்வாசத்திலும் நாடிதுடிப்பிலும் வேதங்கள் நிரவியிருக்கிறது................தொடர்ந்து பார்ப்போம்.................
0 Comments:
Post a Comment
<< Home