த்ரிவிக்கிரமன்

Tuesday, December 07, 2004

நம்முடைய நாட்டில் அரசுபுரிந்த மொகலாய சக்கரவர்தியான ஸாஜகானுடைய மூத்த குமாரனும் ஹவுரங்கசீப்பின் அண்ணனுமான தாராசூகோ என்ற புகழ்பெற்ற ஞானி, கி்பி. 1657 ஆம் ஆண்டில் பல பண்டிதர்களைக்கொண்டு 50 முக்கியமான உபநிஸதங்களை பார்ஸி மொழியில் மொழிபெயர்த்தான். இதனை வைத்தே ஐரோப்பியர்கள் கி.பி. 1801 ல் லத்தீனில் முதன்முதலாக மொழிபெயர்த்து அவற்றின் அருமைபெருமைகளை உலகெங்கும் எடுத்துரைத்தனர். இவ்வாறு நமது பாரம்பரிய புகழ் பரவுவதற்கு காரணமாக இருந்தவர் ஒரு முஸ்லீம். அவருக்கு நாம் மிகவும் கடமைப்பட்டிருக்கிறோம். நமது ஹிந்து மத தர்மப் பிரமானங்களில் முக்கியமானது வேதங்களும் உபநிஸதமும் தான். இந்த உபநிடதங்களில் ஒரு குருவும் சீடனும் உரையாடல் செய்கின்றார்போலவே முழுவதும் காணப்படும். மனதை சுத்தமாக வைத்துக்கொண்டு மெய்ப்பொருளில் உண்மையாக பற்று வைத்திருப்பவர்களுக்கு ஒரு தீணியாகவே இந்த உபநிடதங்களை சொல்லலாம்.....இவற்றில் சில இடங்கள் புரிவதற்கு கடிணமாகவேயிருக்கும்..................ஒரு சிறந்த குருவைக் கொண்டே படிக்கமுடியும்..........ஒரு நாவலோ சிறுகதையோ படிக்கிறார்போல் இந்த உபநிடதங்களை படிக்கமுடியாது..........மொத்தம் ஆயிரத்து சொச்சம் உபநிடதங்கள் இருந்ததாகவும் கூறுவர். வேதங்களில் அடுத்த கட்டம் என்றே கூட உபநிடதங்களை கூறலாம்..........தொடர்ந்து பார்ப்போம்..............

1 Comments:

  • At 7:07 AM, Anonymous Anonymous said…

    WHAT U ARE SAYING IS RIGHT. ONE MUSLIM KING TRANSLATES OUR VEDAS. HE KNOWS THE VALUES., BUT OUR DOGS (DK) DONT WHAT TO DO

     

Post a Comment

<< Home

 
Free Web Counters
Web Hit Counters

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது