வேதங்களை தொகுத்தவர் வியாசர். இவரை வேத வியாசர் என்றும் அழைப்பர். இவர் பல இடங்களிலும் பல ரூபங்களிலும் இருந்த வேதங்களையும் உபநிடதங்களையும் பகுதிவாரியாக பிரித்தார். இவரேதான் மகாபாரதத்தையும் பாகவதத்தையும் படைத்தவர். மகாபாரத்தில் இடைச்செறுகல் என்று அறியோதார் கூறும் பகவான் கண்ணன் அருளியதாக வரும் கீதையையும் படைத்தவர் இவரே. உண்மையில் வேதங்கள் மட்டுமல்ல கீதையும் ஒரு மனிதன் எவ்வாறு இருக்கவேண்டும் அவனின் பணிகள் என்னவென்று தெளிவாகக் கூறும். இந்த வியாசரைப் பற்றி பலவேறு கதைகள் கூறப்பட்டாலும் நதிமூலம் ரிசிமூலம் பார்க்ககூடாது என்பார்கள், அவர்கள் நமக்கு சொல்லியவற்றை நாம் சரியாகச் செய்தோமாவென்றே பார்க்கவேண்டும். வேதத்தில் நிறைய இடங்களில் சிந்து என்கின்ற வார்த்தை வருகின்றது...........இது பற்றிய குறிப்புகளை அடுத்துப் பார்ப்போம்..............
0 Comments:
Post a Comment
<< Home