மகள் : அப்பா மறுபடியும் சந்தேகம்.......
தந்தை : என்ன மறுபடி ஆரம்பித்துவிட்டாயா?
மகள் : அப்பா பிரம்மாவுக்கு எவ்வளவு வயதிருக்கும்?
தந்தை : அதற்கு முன் உனக்கு எத்தனை யுகங்கள் என்பது பற்றி சொல்லவேண்டும். வேதங்களிலும் புராணங்களிலும் மொத்தம் நாண்கு யுகங்கள் காணப்படுகின்றன. அவை க்ருதயுகம், த்ரேதாயுகம், த்வாபரயுகம், கலியுகம்., நாம் இப்போது இருப்பது இந்த கலியுகத்திலே. அதுமட்டும்தானா ஒவ்வொரு யுகத்திலும் மனிதர்கள் எவ்வாறு இருப்பார்கள் அவர்களின் வலிமை ஆயுள் எல்லாம் முன்னமே கணக்கிடப்பட்டிருக்கின்றது. சரி இப்பொழுது உன் கேள்விக்கு வருகிறேன்.... பிரம்மாவுக்கு வயது எவ்வளவுயிருக்கும்? ஒரு பேப்பர் பேனா கொண்டுவா கொஞ்சம் கணக்கிடுவோம் சரியா?
மகள் : சரிப்பா பேப்பரில்லாமல் கணக்கிடமுடியாதா?
தந்தை : உன்னால் முடியுமென்றால் சரி.....
மகள் : இல்லை இதோ வருகிறேன்.....
தந்தை : சரி கணக்கு போடு பார்ப்போம். இப்பொழுது நாம் கணக்கிடும் நாள் வருடக் கணக்குத்தான் சரியா?
மகள் : சரிப்பா....
தந்தை : க்ருத யுகம் 1728000 வருடங்களும், த்ரேதாயுகம் 1296000, த்வாபரயுகம் 864000, கலியுகம் 432000 வருடமாகும். இது போன்ற நாண்கு யுகமும் சேர்த்து பிரம்மாவுக்கு ஒர் இரவாகிறது அதே போன்று ஓர் பகலுமாகிறது. ஆக பிரம்மாவுக்கு ஒரு நாள் என்றால் எத்தனை வருடங்கள் சொல்லு பார்க்கலாம்.....
மகள் : ம்....ம்....8640000 வருடங்கள் ஒரு நாள் பிரம்மாவுக்கா?...
தந்தை : ஆம்.....இப்பொழுது பிரம்மாவுக்கு வயது என்ன தெரியுமா 50 வருடமாகிறது.....அப்போ எத்தனை வருடங்களுக்கு முன் பிரம்மா தோன்றியிருப்பார் சொல்லு பார்க்கலாம்........
மகள் : இருப்பா கொஞ்சம் கால்குலேட்டரை எடுத்து கணக்கு பார்த்துச் சொல்கிறேன் ......
தந்தை : ம்..... சொல்லு......
மகள் : 157680000000 வருடங்கள்......அம்மாடியோவ்......
தந்தை : அதாவது 15768 கோடி வருடங்கள்.... பிரம்மாவுக்கு இந்த வயதாகின்றது என்றால் அவரை படைத்த பரமேஸ்வரனுக்கு வேண்டாம் விட்டுவிடுவோம் என்கிறாயா?
மகள் : இதற்கெல்லாம் ஆதாரம் இருக்கிறதா அப்பா?
தந்தை : உண்டு கண்ணா.... நான் ஆவணி அவிட்டத்தில் பூணூல் மாற்றும் பொழுது சில மந்திரங்கள் சொல்வேன் நீயும் கேட்டிருப்பாய் அதில் சங்கல்பம் என்று ஒன்று உண்டு
...ப்ரவர்த்தமாநஸ்ய ஆ அத்ய ப்ரஹ்மண:
த்விதீயபரார்த்தே ஸ்வேதவராஹ
கல்பேவைவஸ்வதபந்வந்தரே கலியுகே......
என்று கூறுவேன் நீயும் பார்த்திருப்பாய் இதில் பின் வரும் மந்த்ரத்தில் இன்ன மாதம் இன்ன திதி இன்ன நட்சத்திரம் என்றெல்லாம் கூறி சங்கல்பம் செய்வேன் இதிலிருந்துதான் பிரம்மாவுக்கு இத்தனை வருடம் ஆகின்றது என்று கணக்கிட முடிகிறது.
மகள் : அடேங்கப்பா இவ்வளவு சரியாக கணிக்க கூடிய அளவில் வேதங்களில் கணக்கிட முடிகிறதா?
தந்தை : நீ வேறு வேதத்தில் அந்தப் பொழுதில் இருந்த நட்சத்திரங்கள் அதாவது வானத்தில் உள்ள நட்சத்திர அமைப்பை பற்றிய குறிப்புக் காணப்படுகிறது அதை வைத்து பாலகங்காதர திலகர்...
மகள் : திலகரா.... அவர் சுதந்திர போராட்ட வீரரல்லவா....?
தந்தை : ஆம் ஆனால் ஒரு மிகப்பெரிய வேதப்பண்டிதரும் கூட... சரி விசயத்திற்கு வருகிறேன் அவர் அந்த நட்சத்திர அமைப்பினை கணக்கிட்டு சரியாக வேதக்காலத்தை கணக்கிட்டிருக்கிறார் அவர் கணக்கின்படி கி.மு.3000 வேதகாலம் என்று அரிதியிட்டு கூறுவார். ஆனால் நமது காஞ்சி மஹாப் பெரியவர் என்ன சொல்வார் தெரியுமா ஏன் இதுபோன்ற வான் அமைப்பு முன்னர் இருந்திருக்கக்கூடாது ஏன் கி.மு 6000 ஆக இருக்கக்கூடாது என்பார். ஆனால் முன்னமே சொன்னது போன்று வேதங்களின் காலத்தை நம்மால் கணக்கிடமுடியாது......
மகள் : அப்பா எனக்கு பிரமிப்பாக இருக்கிறது.....
தந்தை : இதற்கே இப்படியென்றால் இன்னமும் நிறையயிருக்கிறது சரிசரி ரொம்ப நேரமாகிவிட்டது பிறகு ஒரு நாள் பார்க்கலாம்.......
தந்தை : என்ன மறுபடி ஆரம்பித்துவிட்டாயா?
மகள் : அப்பா பிரம்மாவுக்கு எவ்வளவு வயதிருக்கும்?
தந்தை : அதற்கு முன் உனக்கு எத்தனை யுகங்கள் என்பது பற்றி சொல்லவேண்டும். வேதங்களிலும் புராணங்களிலும் மொத்தம் நாண்கு யுகங்கள் காணப்படுகின்றன. அவை க்ருதயுகம், த்ரேதாயுகம், த்வாபரயுகம், கலியுகம்., நாம் இப்போது இருப்பது இந்த கலியுகத்திலே. அதுமட்டும்தானா ஒவ்வொரு யுகத்திலும் மனிதர்கள் எவ்வாறு இருப்பார்கள் அவர்களின் வலிமை ஆயுள் எல்லாம் முன்னமே கணக்கிடப்பட்டிருக்கின்றது. சரி இப்பொழுது உன் கேள்விக்கு வருகிறேன்.... பிரம்மாவுக்கு வயது எவ்வளவுயிருக்கும்? ஒரு பேப்பர் பேனா கொண்டுவா கொஞ்சம் கணக்கிடுவோம் சரியா?
மகள் : சரிப்பா பேப்பரில்லாமல் கணக்கிடமுடியாதா?
தந்தை : உன்னால் முடியுமென்றால் சரி.....
மகள் : இல்லை இதோ வருகிறேன்.....
தந்தை : சரி கணக்கு போடு பார்ப்போம். இப்பொழுது நாம் கணக்கிடும் நாள் வருடக் கணக்குத்தான் சரியா?
மகள் : சரிப்பா....
தந்தை : க்ருத யுகம் 1728000 வருடங்களும், த்ரேதாயுகம் 1296000, த்வாபரயுகம் 864000, கலியுகம் 432000 வருடமாகும். இது போன்ற நாண்கு யுகமும் சேர்த்து பிரம்மாவுக்கு ஒர் இரவாகிறது அதே போன்று ஓர் பகலுமாகிறது. ஆக பிரம்மாவுக்கு ஒரு நாள் என்றால் எத்தனை வருடங்கள் சொல்லு பார்க்கலாம்.....
மகள் : ம்....ம்....8640000 வருடங்கள் ஒரு நாள் பிரம்மாவுக்கா?...
தந்தை : ஆம்.....இப்பொழுது பிரம்மாவுக்கு வயது என்ன தெரியுமா 50 வருடமாகிறது.....அப்போ எத்தனை வருடங்களுக்கு முன் பிரம்மா தோன்றியிருப்பார் சொல்லு பார்க்கலாம்........
மகள் : இருப்பா கொஞ்சம் கால்குலேட்டரை எடுத்து கணக்கு பார்த்துச் சொல்கிறேன் ......
தந்தை : ம்..... சொல்லு......
மகள் : 157680000000 வருடங்கள்......அம்மாடியோவ்......
தந்தை : அதாவது 15768 கோடி வருடங்கள்.... பிரம்மாவுக்கு இந்த வயதாகின்றது என்றால் அவரை படைத்த பரமேஸ்வரனுக்கு வேண்டாம் விட்டுவிடுவோம் என்கிறாயா?
மகள் : இதற்கெல்லாம் ஆதாரம் இருக்கிறதா அப்பா?
தந்தை : உண்டு கண்ணா.... நான் ஆவணி அவிட்டத்தில் பூணூல் மாற்றும் பொழுது சில மந்திரங்கள் சொல்வேன் நீயும் கேட்டிருப்பாய் அதில் சங்கல்பம் என்று ஒன்று உண்டு
...ப்ரவர்த்தமாநஸ்ய ஆ அத்ய ப்ரஹ்மண:
த்விதீயபரார்த்தே ஸ்வேதவராஹ
கல்பேவைவஸ்வதபந்வந்தரே கலியுகே......
என்று கூறுவேன் நீயும் பார்த்திருப்பாய் இதில் பின் வரும் மந்த்ரத்தில் இன்ன மாதம் இன்ன திதி இன்ன நட்சத்திரம் என்றெல்லாம் கூறி சங்கல்பம் செய்வேன் இதிலிருந்துதான் பிரம்மாவுக்கு இத்தனை வருடம் ஆகின்றது என்று கணக்கிட முடிகிறது.
மகள் : அடேங்கப்பா இவ்வளவு சரியாக கணிக்க கூடிய அளவில் வேதங்களில் கணக்கிட முடிகிறதா?
தந்தை : நீ வேறு வேதத்தில் அந்தப் பொழுதில் இருந்த நட்சத்திரங்கள் அதாவது வானத்தில் உள்ள நட்சத்திர அமைப்பை பற்றிய குறிப்புக் காணப்படுகிறது அதை வைத்து பாலகங்காதர திலகர்...
மகள் : திலகரா.... அவர் சுதந்திர போராட்ட வீரரல்லவா....?
தந்தை : ஆம் ஆனால் ஒரு மிகப்பெரிய வேதப்பண்டிதரும் கூட... சரி விசயத்திற்கு வருகிறேன் அவர் அந்த நட்சத்திர அமைப்பினை கணக்கிட்டு சரியாக வேதக்காலத்தை கணக்கிட்டிருக்கிறார் அவர் கணக்கின்படி கி.மு.3000 வேதகாலம் என்று அரிதியிட்டு கூறுவார். ஆனால் நமது காஞ்சி மஹாப் பெரியவர் என்ன சொல்வார் தெரியுமா ஏன் இதுபோன்ற வான் அமைப்பு முன்னர் இருந்திருக்கக்கூடாது ஏன் கி.மு 6000 ஆக இருக்கக்கூடாது என்பார். ஆனால் முன்னமே சொன்னது போன்று வேதங்களின் காலத்தை நம்மால் கணக்கிடமுடியாது......
மகள் : அப்பா எனக்கு பிரமிப்பாக இருக்கிறது.....
தந்தை : இதற்கே இப்படியென்றால் இன்னமும் நிறையயிருக்கிறது சரிசரி ரொம்ப நேரமாகிவிட்டது பிறகு ஒரு நாள் பார்க்கலாம்.......