த்ரிவிக்கிரமன்

Tuesday, November 30, 2004

வேதங்கள் எப்பொழுது தோன்றின?

வேதங்கள் எப்பொழுது தோன்றின? நம் ஆராய்ச்சியாளர்கள் கூறுவது என்ன பார்ப்போமா? ஒரு சிலர் வேதங்கள் கி.மு. 1500 வருடங்களில் தோன்றியது என்பர், ஒருசிலர் கி.மு.3000 வருடங்களில் தோன்றியது என்பர். ஆனால் காஞ்சி பெரியவர் கூறுவதை சற்று பார்ப்போம், வேதங்களை நம்மால் கணக்கிடமுடியாது அவை பரமாத்மாவிடமிருந்தே தோன்றியது. உபநிசத்தில் ஒரு சூக்தத்தில் காணப்படும் கிரஹநிலைகளை வைத்துக் கணக்கிட்டுப் பார்த்தோமாயின் வேதங்கள் கி.மு. 6000 வருடங்களுக்கு முன்னரே தோன்றியது. ஆனால் அதேபோன்று கிரகநிலைகள் ஏன் முன்னரே ஏற்பட்டிருக்கக்கூடாது, ஆகையால் நாம் வேதங்களின் காலக்கணக்கை கண்டறிவது என்பது இயலாதஒன்று, இது உண்மைதான் வேதங்கள் பரமாத்மாவின் மூச்சுக்காற்றிலிருந்தே தோன்றியது என்றும் அவை அனைத்தும் சப்தங்களாகவே இருந்தன என்றும் அவற்றை முனிவர்கள் கடும் தவத்தால் நீண்ட வேட்கையின் பிறகே கிடைத்தன என்றும் அவையே வேதங்கள் என்றும் உபநிடதங்களில் சான்றுகள் உள்ளன. அப்படியாயின் பரமாத்மாவின் மூச்சில் இருந்த வந்த வேதங்கள் எவ்வளவு காலம் அண்டங்களில் நிரவியிருந்தது என்றும் முனிவர்களின் கடும் தவம் எவ்வளவுகாலம் இருந்தது என்றும் கணக்கிடமுடியாது. ஆகவே வேதங்களின் காலத்தை நம்மால் கணக்கிடமுடியாது..................தொடர்ந்து பார்ப்போம்........

Monday, November 22, 2004

மொத்தம் வேதங்கள் நான்கு என்று சொன்னேன் அல்லவா அவை மூலங்கள் என்று சொல்லலாம். ஆனால் உபவேதங்கள் மொத்தம் பத்து. அவற்றை இரண்டாக பிரித்துள்ளனர் முனனோர்கள். அவை ஷடங்கம் மற்றும் உபாங்கம் எனப்படும். ஷடங்கம் என்றால் ஆறு வகைப்பட்ட நூல்கள் என்று அர்த்தம்,
அவை
1. சிசை
2. வியாகரணம்
3. சந்தஸ்
4. நிருத்தம்
5. ஜயோதிசம்
6. கல்பம்
மீதமுள்ள நான்கும் உபாங்கமாகும்,

அவை
1. மீமாம்ஸை
2. நியாயம்
3. புராணம்
4. தர்ம சாஸ்திரம்
இவையெல்லாம் இல்லாமல்
1. ஆயுர் வேதம்

2. அர்த்த சாஸ்திரம்
3. தனுர் வேதம்
4. கந்தர்வ வேதம்
இவையெல்லாமும் வேதத்திலேயே அடங்கும் ஆனால் இவை மூல வேதமன்று. ஏற்கனவே சொன்னது போன்று வேதங்கள் முழுவதும் சப்தங்கள் (vibrations) இவை நமக்குரிய பலன்களை தருகின்றது. ஒரு மனிதன் பிறப்பதிலிருந்து அவன் சமாதியடையும் வரை எல்லா இடங்களிலும் வேதங்கள் நம்முடன் வருகின்றது. தொடர்ந்து பார்ப்போம்..........

Sunday, November 21, 2004

வேதங்கள் நான்கு வகை

நமது இந்திய நாட்டின் பண்பாடினை நாம் நமக்கிருக்கும் பெருஞ்செல்வமான வேதங்கள் மூலம் அறியலாம். வேதங்கள் நான்கு வகை, ரிக், யசூர், சாம, அதர்வணம். இதில் ரிக் வேதம்தான் முதலில் வந்தது என்பாரும் உண்டு, மற்ற வேதங்களிலும் ரிக் பற்றிய குறிப்பும் காணப்படுகிறது. ஆகவே எது முதல் என்று நாம் கணக்கிடமுடியாது. இந்த வேதங்கள் அனைத்தும் ஒலி வடிவினதாகவே இருக்கிறது. சத்தம் (VIBRATIONS) நம்முள் உள் தோன்றி சப்தமாக வரும்போது பெரிய விளைவுகளை ஏற்படுத்துகின்றது. இதில் ரிக் வேதம், முழுக்க என்று கூட கூறலாம், அக்னியைப் பற்றியே குறிப்புகள் வருகிறது. இந்த ரிக்கில் (ரிக் என்றால் மந்திரம்) மொத்தம் 10170 மந்திரங்கள் உள்ளன. இவை அனைத்துமே நம்முள் இருக்கும் ஆத்மா (அக்னி) அதன் பிறப்புப் பற்றியும் அதன் மறுபிறப்பைப்பற்றியும் தெரிவிக்கிறது. இவையெல்லாம் ஒரே நாளில் எழுதப்பட்டவையல்ல நன்கு ஆராய்ச்சி செய்து அவற்றை பிரயோகித்துப் பார்த்து பின்னரே பல்வேறு முனிவர்களால் பலவேறு சமயங்களில் சொல்லப்பட்டவை. நாம் பிறக்கும்போதும் இறக்கும்போதும் என்ன செய்யவேண்டும், அப்படி செய்வதால் என்ன பலன் கிடைக்கும் என்பதைப் பற்றியெல்லாம் வேதங்கள் சொல்கிறது. தொடர்ந்து பார்ப்போம்..........

Friday, November 19, 2004

சரசுவதியை உயிர்ப்பிப்போம்என்ன இது சரசுவதியை உயிர்ப்பிப்பதா என்ற கேள்வி எழுகிறதா? நமது நாட்டில் தற்பொழுது ஓடும் ஆறுகளை விட தொண்மையானதும் தெய்வீகமானதுமான சரசுவதியை தான் உயிர்ப்பிக்க சொல்கிறேன். எங்கே ஓடுகிறது சரசுவதி என்று கேட்கலாம்..........அழிந்துவிட்டது முற்றிலுமாக.......ஆனால் அந்த ஆற்றினை பற்றி பல குறிப்புகள் ரிக் வேதத்தில் காணப்படுகிறது. அம்பிதாம்பே நதிதாம்பே தேவிதாம்பே சரசுவதி - இருக்கும் தாய்க்கு எல்லாம் மேலானவளே... நதிகளுக்கெல்லாம் மேலானவளே... இருக்கும் தேவதைகளுக்கெல்லாம் மேலானவளே....சரசுவதியே.....கங்கேச யமுனே ச்சைவ கோதாவரி சரசுவதி நர்மதே சிந்து காவேரி ஜலச்மின் சன்னிதிம் க்குருஇந்தப் பாடலில் எல்லா ஜீவ நதியும் பாய்கின்றது சரசுவதியைத் தவிர.......என்ன இது வியப்பேற்படுகிறதா? ஆம் சரசுவதி நதி சுமார் 5000 வருடங்களுக்கு முன் நமது பாரத கண்டத்திலே பாய்ந்துள்ளது. அதுவும் பத்ரிநாத்திற்கு அருகே தோன்றி ராஜதானின் தார் பாலைவனத்திலெல்லாம் பாய்ந்து கட்ச் வளைகுடா வரை பாய்ந்தது என்று நமது ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வேதங்களிலும் புராணங்களிலும் இதற்கு ஆதாரங்கள் உள்ளன. 1998 ஆம் ஆண்டு இந்தியன் ரிமோட் சென்சிங் சாட்டிலைட் மூலமாக நமது ஆராய்ச்சியாளர்கள் இந்த சரசுவதி நதியினை கண்டறிந்தனர், மேலும் இந்த நதி சுமார் 1600 கி.மீ பாய்ந்துள்ளது என்பது மிகவும் வியப்பானதாகும். டாக்டர் S.கல்யாணராமன் என்ற தமிழகத்தை சேர்ந்த விஞ்ஞானி இதனை கண்டறிந்துள்ளார். பாரதயுத்தம் நடந்தது இந்நதியின் கரையில்தான், கண்ணன் துவாரகா என்ற ஒரு பெரும் ஊரை உருவாக்கியதும் இந்நதி கடலில் கலக்கும் இடத்திற்கு அருகில்தான். ஆக கண்ணன் மற்றும் அவனின் திருவிளையாடல்கள் அனைத்தும் உண்மையில் நடைபெற்றதாக இருக்கவேண்டும். வேதங்கள் மற்றும் புராணங்கள் கூறுபவை வெறும் கற்பனை என்று விட்டுவிடக்கூடாது.... அதனை நீண்டதொரு ஆராய்ச்சி செய்யவேண்டும். அதில் இருக்கும் உண்மைகளை கண்டறிவது நமது தலையாய கடமையாகும். நமது பாரம்பரியம் இந்த உலகத்திற்கு எடுத்துச்சொல்வது ஒவ்வொரு இந்தியனுக்கும் இன்றியமையாதது. இந்த சரசுவதி நதி சுமார் 1500 ஆண்டுகள் கிறிது பிறப்பதற்கு முன்னரே வறண்டுவிட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். மேலும் ராஜதானில் பாலைவனத்தில் ஒரு ஆழ்துளை அதாவது 60 மீட்டர் ஆழத்திற்கு இட்டு அதிலிருந்து தண்ணீரை எடுத்து ஆராய்ச்சி செய்ததில் அந்த நீர் சுமார் 3000 வருடங்களுக்கு மேல் அந்த இடத்திலேயே இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நாம் என்ன செய்யவேண்டும் மீண்டும் அந்த நதியை உயிர்ப்பிக்கவேண்டும், பாலைவனத்தை சோலைவனமாக்கவேண்டும். முடியும் முயற்சி செய்தால் அதற்கு இந்த அரசும் ஒத்துழைத்தால்...........நிச்சயம் சரசுவதி உயிர்த்தெழும்..........காத்திருப்போம்.
 
Free Web Counters
Web Hit Counters

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது